18 சித்தர்கள் பாடல் தொகுப்பு
அகத்தியர் ஞானப் பாடல் :-
இவர் இயற்றிய ஞானப் பாடல் மிகவும் இனிமையும்
அறியச்செய்திகளும் உள்ளடக்கியது.மக்கள் இவுலகில் இன்பமாக
இவர் ஆனதக் கோனாரையும்,ஆட்டையும்,
பசுமாட்டையும்,அன்னப்பறவையும்,புல்லாங்குழலையும்,
அறிவையும்,நெஞ்சுசையும்,மயிலையும்,குயிலயும் முன்னிலை
பொருளாக கொண்டு பாடியவர் .
தன்வந்திரி
இவர் மிகசிறந்த மருத்துவ வல்லுநராக திகழ்ந்தவர்.
இவருடைய மருத்துவ நூல்கள் இதனை மெய்ப்பிக்கின்றன.
இவருடைய வரலாறு காலம் பற்றி உறுதியாக தெரியவில்லை.
தான் என்ற உலகத் தில் சிறிது பேர்
சடைபுலித்தோல் காஷாயம் வடங்கள் பூண்டு
சடைபுலித்தோல் காஷாயம் வடங்கள் பூண்டு
ஊன் என்ற உடம்பெல்லாம் சாம்பல் பூசி
உலகத்தில் யோகி என்பர் ஞானி என்பார்
தேன் என்ற சிவபூஜை,தீட்டிசை என்பார்
திருமாலைக் கண்ணாலே கண்டோம் என்பார்
கான் என்ற காட்டுக்குள் அலைவார் தேடி
காரணத்தை அறியாமல் கதறு வாரே
என்னும் வரிகள் என் இதயம் தொட்ட வரிகள்
கொங்கணர்
கொங்கணர் சித்தர் கொங்குநாடடில் பிறந்தவர்.இவருடைய
தாய் தந்தையர் இரும்பை உருகிக்கலங்கள் செய்து கோவில்
வாசலில் வைத்து அவற்றை விற்று பிழைத்து வந்தனர்.